follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுமருந்துகளை இறக்குமதி செய்வது பற்றி கலந்துரையாடல்

மருந்துகளை இறக்குமதி செய்வது பற்றி கலந்துரையாடல்

Published on

இந்தியாவின் கடன் தள்ளுபடியின் கீழ் பெறப்பட்ட மீதமுள்ள தொகையை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனின் கீழ் எஞ்சிய தொகையை மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மிலிந்த் மொரகொடவுக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் இடையிலான சந்திப்பு புதுடெல்லியில் உள்ள நாட்டின் நிதியமைச்சில் இடம்பெற்றதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு அவசியமான நாட்டின் கடன் மறுசீரமைப்பின் தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய மருந்துகளை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிதத் சுரங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...