follow the truth

follow the truth

February, 11, 2025
Homeஉள்நாடு3.9 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி

3.9 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி

Published on

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுமார் 3.9 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2023 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம், விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்குவதற்கும் பிரதிகூலங்களை குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயன்றவரை பணத்தைப் பாதுகாக்கும் வகையில், அரிசி கொள்வனவு வேலைத்திட்டத்தை இவ்வருடம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் அதிக விளைச்சம் கிடைக்கும் என நம்புகிறோம். இதன் விளைவாக, விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல் 100 ரூபாவுக்கு கொள்முதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிப்ரவரி 14 ஆம் திகதியளவில் நுரைச்சோலை மின் நிலையம் இயல்பு நிலைக்கு

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க...

340,000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பாரப்பு

2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உரிமம்...

ஜனவரி 01 முதல் பெப்ரவரி 7 வரை வீதி விபத்துகளில் 203 பேர் பலி

இந்த வருடத்தில் இதுவரையான காலத்தில் மட்டும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக...