follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP1இலங்கையில் இருந்து முதல் முறையாக சந்தைக்கு மோட்டார் கார்

இலங்கையில் இருந்து முதல் முறையாக சந்தைக்கு மோட்டார் கார்

Published on

இலங்கையில் முதன் முறையாக அசெம்பிள் செய்யப்பட்ட Hyundai Grand i10, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்று (10) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இணைந்து சீதுவயில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில் இந்த காரின் அசெம்பிளிங் செய்யப்படுகிறது.

வாகனங்களை ஒன்று சேர்ப்பது மற்றும் வாகன உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் துறையில் இந்த நிகழ்வு ஒரு பாரிய படியாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த காரை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், முதலீட்டு சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, அபான்ஸ் குழும நிறுவனங்களின் பணிப்பாளர்கள் சரோஷி துபாஷ் மற்றும் ருசி பெஸ்டோன்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.