follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுநிலக்கரி கப்பல்களில் 6 கப்பல்கள் நாட்டுக்கு

நிலக்கரி கப்பல்களில் 6 கப்பல்கள் நாட்டுக்கு

Published on

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த ஏழு நிலக்கரி கப்பல்களில் 6 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் மின்வெட்டுகளின் கீழ் பெப்ரவரி மாதம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இருப்பு போதுமானது என அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.

மேலும், பெப்ரவரி மாதத்தில் 07 நிலக்கரி கப்பல்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இம்மாதம் 05 கப்பல்கள் மட்டுமே நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையில் இருந்து நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இலங்கை நிலக்கரி நிறுவனம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ஜனவரி 30 முதல் பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் நிலக்கரிக்காக 12.32 மில்லியன் டொலர்கள் அதாவது 4.56 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒரு பகுதியை சப்ளையர்களுக்கு செலுத்த முடியும் என்றாலும், வேறு சில கப்பல்களுக்கு முன்பணம் மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என நிலக்கரி நிறுவனம் உரிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...