follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுதேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபா கோரிக்கை

தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபா கோரிக்கை

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான அடிப்படைச் செலவுகளுக்காக பெப்ரவரி மாதத்தில் 770 மில்லியன் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உரிய தொகையை ஒரேயடியாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் செலவினங்களுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிதியமைச்சு இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 37 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் திகதி வரையிலான காலப்பகுதியில் 04 பில்லியன் ரூபா வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக...