தேசிய ஓளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்த பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேற்படி, அதிகார சபையின் தரவு தளத்தைப் பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநராகக் கடமையாற்றிவந்த குறித்த நபர் கடந்த 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.