ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரின் நலம் விசாரித்ததுடன், அட்டபிரிகையும் வழங்கினார்.
புனித மல்வத்து மகா நாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதியை ஆசீர்வதித்ததுடன் வணக்கத்துக்குரிய ஸ்ரீ சுமங்கல நா தேரர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.
மல்வத்து மகா விகாரையில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றை இடுவதற்கும் ஜனாதிபதி மறக்கவில்லை.
அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய தரப்பு மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன் நஹிமியை சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அஸ்கிரி மகா விகாரையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்ததோடு, அஸ்கிரி மகா நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கரத்தினரும் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார்.