follow the truth

follow the truth

March, 13, 2025
Homeஉள்நாடுமல்வத்து - அஸ்கிரி தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

மல்வத்து – அஸ்கிரி தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரின் நலம் விசாரித்ததுடன், அட்டபிரிகையும் வழங்கினார்.

புனித மல்வத்து மகா நாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதியை ஆசீர்வதித்ததுடன் வணக்கத்துக்குரிய ஸ்ரீ சுமங்கல நா தேரர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.

மல்வத்து மகா விகாரையில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றை இடுவதற்கும் ஜனாதிபதி மறக்கவில்லை.

அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய தரப்பு மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன் நஹிமியை சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அஸ்கிரி மகா விகாரையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்ததோடு, அஸ்கிரி மகா நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கரத்தினரும் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 17ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

தொழிற்சங்க நடவடிக்கையில் கிராம உத்தியோகத்தர்கள்

கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை...

அநுராதபுரம் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை...