follow the truth

follow the truth

March, 13, 2025
HomeTOP1சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றது

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றது

Published on

எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதே எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அநுராதபுரம் வைத்தியசாலை வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை...

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரங்கள்

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அரச கதிரியக்க...