follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடுதேர்தலை நடத்தினால் நாடு மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளப்படும்

தேர்தலை நடத்தினால் நாடு மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளப்படும்

Published on

மக்களின் நம்பிக்கை மீண்டும் உயரும் போது 8000 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கும் நிலையை எதிர்கட்சி எதிர்பார்த்தால் நாடு மீண்டும் பொருளாதார பாதாளத்தில் விழுவதுடன் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மேலும், வாகனக் குத்தகை, வங்கிக் கடனைச் செலுத்த முடியாதவர்கள் எதிர்காலத்தில் இக்கட்டான காலத்தை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்த வஜிர அபேவர்தன, இவற்றில் எதிலுமே கவனம் செலுத்தாவிடின் எதிர்கட்சிகள் சார்பாக நின்றால், தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தலுக்காக மாத்திரம் சுமார் 20 பில்லியன் செலவிடப்படும் எனவும், தெரிவு செய்யப்பட்ட 8000 உறுப்பினர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இது சாத்தியமில்லை எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஹினிதும மற்றும் எல்பிட்டிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத்...

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு...