ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை (07) மாலை விசேட அமைச்சரவை கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசேட கூட்டத்தின் போது சீமெந்து, பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.