இலங்கையில் ஆசிரியர் தினம் இன்று (06) கொண்டாடப்படுகின்றது.
இன்று(06) 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் ஆகிய இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய தினம், ஆசிரியர் அதிபர்களின் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டம் 87 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06) அதிபர்களும் போராட்டத்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.