follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடுமின்வெட்டை தவிர்க்க தேவையான அளவு நீரை விடுவிக்க தீர்மானம்

மின்வெட்டை தவிர்க்க தேவையான அளவு நீரை விடுவிக்க தீர்மானம்

Published on

உயர்தர பரீட்சை நடைபெறுகின்ற எதிர்வரும் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியான நீர் விநியோகம் தொடர்பாக அதிகார சபை எதிர்வரும் முதலாம் திகதி கலந்துரையாடவுள்ளது.

எதிர்வரும் தினங்களில் அதிக மழைவீழ்ச்சியினை எதிர்பார்ப்பதாகவும் இது பரீட்சை காலத்தில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு தெரிவித்துள்ளது.

நீர் மின் நிலையங்களுக்கு மேலதிகமாக, போதியளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஏனைய மின் பிறப்பாக்கிகளை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று(30) முதல் மின்வெட்டைத் தவிர்ப்பதற்கு தேவையான அளவு நீரை விடுவிப்பதற்கு மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்றும்(30) இன்றும்(31) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைரஸ் தொற்று – பன்றி இறைச்சி உண்ண வேண்டாம்

தற்போது பன்றிகளுக்கிடையே பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை...

விசேட வர்த்தக பண்ட வரி அறவீடு? நிதி அமைச்சு விளக்கம்

ஐந்து வகையான பொருட்களுக்குப் புதிய விசேட வர்த்தகப் பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான...

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...