follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடு'சுதந்திரம்' ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்தது

‘சுதந்திரம்’ ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்தது

Published on

“சுதந்திரம்” கிடைத்தவுடன் அது ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

“சுதந்திரம் கிடைத்தவுடன் அது ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்தது. சிறுபான்மையினராக இருந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாக நினைத்தனர். ஆனால் தாங்கள் உண்மையில் விடுதலை பெறவில்லை என்பதை இப்போது அவர்களும் உணர்ந்துள்ளனர்”

75வது தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு கூறுகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

“சுதந்திரம் கிடைத்த உடனேயே ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மை அமைப்பாக மாற்றப்பட்டது. அதனால் தான் இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பௌத்த மக்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்ததாக நினைத்தனர். எனினும், தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர். எனவேதான் பெப்ரவரி 4ஆம் திகதி 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாடிய போது இந்த நாட்டில் வாழும் எவருக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். அதனால்தான் இதை கொண்டாடும் போது கறுப்பு நாளாக அறிவித்து, நாட்டின் சுதந்திரத்தை முறையாகப் பெறுவதற்கான இயக்கத்தைத் தொடங்குகிறோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்க இந்தியாவிடமிருந்து முன்மொழிவு

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், முதல் இருதரப்பு அபிவிருத்தி திட்டமாக 5 பில்லியன் அமெரிக்க...

பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள்...

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் : மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை

அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும்...