அரச வைத்தியசாலைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் சிறுநீரக நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ரஜரட்ட சிறுநீரக பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக, அண்மைக்காலமாக நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
மருந்து தட்டுப்பாடு குறித்து கடந்த 26ம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதம் அனுப்பியும் முறையான பதில் வரவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் ரஜரட்ட சிறுநீரக அறக்கட்டளை இன்று செய்தியாளர் மாநாட்டை நடத்தியது.
அங்கு பேசிய ரஜரட்ட சிறுநீரக பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் ஜே.பி. வர்ணசூரியன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“மருந்து எடுக்க ரெண்டு மூணு நாள் போகணும்.. போகும்போது மறுநாள் வரச் சொல்றாங்க.. போனாலும் மூணாவது நாள் நம்ம க்ரூப்ல போக காசு இல்லை. மருந்தகங்களில் மருந்து வாங்கச் சொல்கிறார்கள். விலை உயர்ந்ததால் யாரும் மருந்து வாங்கமுடியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நிறைய வாழ்ந்திருக்கக்கூடிய நோயாளிகள் இறக்கின்றனர். இது தொடர்ந்தால், ஒரு மாதத்தில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இறந்து விடுவார்கள்.”