follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது நிதி மோசடி குற்றச்சாட்டு

இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது நிதி மோசடி குற்றச்சாட்டு

Published on

இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு

இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

அதானி பங்குச் சந்தையையும் கணக்குகளையும் ஏமாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

அதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஒரே நாளில் அதானியின் பங்குச் சந்தை மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது. அதானி நிறுவனத்தின் பங்குகள் ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அதானி நிறுவனம் தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதாகக் கூறுகிறது. சம்பந்தப்பட்ட அறிக்கை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெளதம் அதானி கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் அதானி. கௌதம் அதானி ஆசியாவின் கோடீஸ்வரரும் கூட. ஃபோர்ப்ஸ் தரவரிசையின்படி, அவர் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 03 வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...