follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP3"வரிகளை நீக்கினால், IMF உதவிகள் கிடைக்காது.."

“வரிகளை நீக்கினால், IMF உதவிகள் கிடைக்காது..”

Published on

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் நீக்கப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) தெரிவித்தார்.

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் 100,000 ரூபா வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வர முடியாவிட்டால் இரண்டு வாரங்களுக்கு மேல் நாடு இயங்க முடியாது எனவும், அதற்கான வழியை வழங்குபவர்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...