பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் இலங்கை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TISL) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய பண, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான இரகசிய தகவல்கள் பென்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) வெளியாகியுள்ளன.
முன்னாள் நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அஅமைச்சரான நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருகுமார் நடேசன் ஆகியோரின் கடல் கடந்த பாரியளவான சொத்துக்களை இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் இலனாகி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.