follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஅடுத்த மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்

அடுத்த மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்

Published on

அடுத்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டவுடன் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு மாத்திரம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிகாரி, இது தொடர்பில் ஜனாதிபதி இன்னும் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆரம்பத்திலிருந்தே சாதகமான கருத்தை கொண்டிருந்தாலும், நல்லாட்சியின் காலத்திலும் அது நடைமுறையில் இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் தலையீட்டினால் இதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அலுவலக அதிகாரி, எதிர்வரும் மாகாண சபைகள் சட்ட வரைவை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...