மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (24) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் தென் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றும் ஏற்படக்கூடும் என்பதால் விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.