follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2களனிதிஸ்ஸ மீண்டும் சேவையில் இணைந்தது

களனிதிஸ்ஸ மீண்டும் சேவையில் இணைந்தது

Published on

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ஆலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போதியளவு நாப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள நாப்தாவைக் கொண்டு மீள் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் பணம் செலுத்தப்படாமையால் நாப்தா வழங்க மறுத்தமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...