follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP3உயர்தரப் பரீட்சைக்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலுக்கு

உயர்தரப் பரீட்சைக்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலுக்கு

Published on

உயர்தரப் பரீட்சைக்கான விசேட போக்குவரத்துத் திட்டத்தை ரயில்வே மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணைந்து இன்று(23) முதல் ஆரம்பித்துள்ளன.

இதனால் உயர்தரப் பரீட்சைக்காக 1,617 மாணவர் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பொது முகாமையாளர் கலாநிதி நிமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கால அட்டவணையின்படி, இலங்கை தேசிய போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றார்.

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள், பரீட்சை நிலைய பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என, தேவைப்பட்டால் பேருந்தில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதைய புகையிரத பயணங்களுக்கு மேலதிகமாக, பிரதான வீதியில் 12 புகையிரத பயணங்களும், கரையோர பாதையில் 4 பயணங்களும் உயர்தர பாடசாலைக் காலத்தில் அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதி அத்தியட்சகர் எம்.டி. இதிகொல்ல கூறினார்.

இந்த 16 ரயில் பயணங்களும் முன்பு இரத்து செய்யப்பட்ட ரயில் பயணங்கள் என்றும், திட்டமிட்டபடி ரயிலை இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஒரு ரயில் சிக்கலில் சிக்கினால் அதனை தொடர்ந்து செல்லும் கடுகதி ரயில் வேகம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...