follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுஉயர்தர மாணவர்களுக்கு மேலதிக நேரம் ஒதுக்கீடு

உயர்தர மாணவர்களுக்கு மேலதிக நேரம் ஒதுக்கீடு

Published on

நாளை (22) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டமையினால் பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான மலையக ரயில்...