உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என ஜனநாயக மறுசீரமைப்புக்கான தேர்தல் கற்கை நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.
விரைவில் ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் சபாநாயகர் கையொப்பமிட்டவுடன் தேர்தல் நிதி சட்டமூலம் அமுலுக்கு வரும் எனவும் அதில் பிழைகள் ஏதும் இருப்பின் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.