இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இன்று(18) மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொள்கின்ற நிலையில், அந்த பயணத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன், இணைச் செயலர் புனித் அகர்வால், இயக்குநர் சந்தீப் குமார் பையப்பு, துணைச் செயலர் (இலங்கை), நிதி சௌத்ரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலர் ரகூ பூரி ஆகியோரும் வருகைத்தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.