follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுஉறவினர்கள் - நண்பர்களுக்கு பேரூந்துகளை வழங்கவில்லை

உறவினர்கள் – நண்பர்களுக்கு பேரூந்துகளை வழங்கவில்லை

Published on

இந்நாட்டில் இலவசக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கே பிரபஞ்சம் திட்டம் மூலம் பேரூந்துகளை வழங்குகிறேனே தவிர யாருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த உன்னத வேலைத்திட்டம் தொடர்பில் தேவைப்பட்டால் ஒருவார கால பாராளுமன்ற விவாதத்திற்கு தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பல பாடசாலைகளில் போக்குவரத்துச் செலவு பாரியளவில் செலவாகுவதாகவும், அது இந்நாட்டில் உள்ள பெற்றோரின் பணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு பரிகாரமாகவே பஸ் வசதிகளை ஏற்பாடு செய்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சிலர் தேர்தலின் போது தமது சின்னம் மற்றும் விருப்பிலக்கங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களுக்கு பஸ்களை பயன்படுத்துகிறார்கள் என்றாலும், குழந்தைகளின் நலனுக்காகவே தாம் பஸ்களை நன்கொடையாக வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை" ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல்,...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22)...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...