இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 பஸ்களை வழங்குவதற்கான உத்தரவை வென்றுள்ளதாக இந்திய அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகங்கள் இன்று இதனைத் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய கடன் வசதியின் கீழ் இந்த பஸ்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் 75 பேருந்துகள் முன்னர் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.