உலகின் அதிக வயதான நபரான பிரெஞ்ச் அருட்சகோதரி ஆண்ட்ரே தமது 118 ஆவது வயதில் நேற்று (17) இயற்கை எய்தினார்.
1904 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பிறந்த சகோதரி ஆண்ட்ரே, GRG (World Supercentenarian Rankings List) தர வரிசைப்படி உலகின் அதிக வயதானவராக பதிவாகியிருந்தார்.
லூசில் ராண்டன் (Lucile Randon) 1944 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரியாக இணைந்த போது ”அருட்சகோதரி ஆண்ட்ரே” என்ற பெயரை பெற்றார்.