follow the truth

follow the truth

March, 21, 2025
Homeஉள்நாடுமாவனல்லை இரட்டை கொலையில் இரு சந்தேகநபர்கள் கைது

மாவனல்லை இரட்டை கொலையில் இரு சந்தேகநபர்கள் கைது

Published on

மாவனல்லை பிரதேசத்தில் இரு இளைஞர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனல்லை மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிஓயா பிரதேசத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலை செய்யப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த இரு இளைஞர்களை கொன்று புதைத்த சம்பவத்தில் மாவனல்லை பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் வியாபாரி என கருதப்படும் நபர் ஒருவரையும் அவரது மூன்று கையாளர்களையும் கைது செய்ய கேகாலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் கடத்தல்காரரின் கையாளர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இணைப்புச் செய்தி 
ஐஸ் தகராறில் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் உடல்கள் தோண்டியெடுப்பு

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...