நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 55 பேர் உயிரிழந்துள்ளனர் என
அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13,000ஐ கடந்தது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 17 பெண்களும் 38 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.