follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுபற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பெப்ரவரியில்

பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பெப்ரவரியில்

Published on

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின் மானியத்தின் கீழ் இலங்கையில் இந்த மருந்துகள் பெறப்படுவதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அரிதான மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த மருந்துகள் கிடைக்கும் வரை, மஹரகம வைத்தியசாலை உட்பட தீவின் புற்றுநோய் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...