எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை ஏற்படுவதற்கு ஏற்ற வளிமண்டல நிலை உருவாக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்பகுதியில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.