follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்பெட்ரோல் விநியோகிக்க இராணுவத்தை களமிறக்கும் பிரிட்டன்

பெட்ரோல் விநியோகிக்க இராணுவத்தை களமிறக்கும் பிரிட்டன்

Published on

பிரிட்டனில் பெட்ரோல் நிலையங்களுக்குப் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விநியோகம் செய்யும் கனரக வாகன சாரதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் நிலையங்களில் போதிய அளவுக்கு எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இப்பிரச்சனையை தீர்க்க, பிரிட்டன் அரசு இராணுவத்தை களமிறக்கியுள்ளது.

ஏதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை எதிர்கொள்ளும் பணியில் சுமார் 200 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து 300 எரிபொருள் டேங்கர் லாரி சாரதிகளை வரவழைத்து, அவர்கள் வரும் மார்ச் மாதம் வரை பணியாற்ற வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

பிரிட்டனில் 1,100 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களிடம் பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய கருத்துக் கணிப்பில் 26 சதவீத பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் கையிருப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...