பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் 300 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதிலும் 06 ஆம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர்களை அனுமதிப்பதிலும் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.