பொது நிர்வாக அமைச்சர் செயலாளர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு குறிப்பிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.