follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுஷாப்டர் மரணம் தற்கொலை அல்ல - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ஷாப்டர் மரணம் தற்கொலை அல்ல – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Published on

இலங்கையின் பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் கொலை தற்கொலை என தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 175 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

“இதுவரை, மரணம் தற்கொலை என்று எந்த தகவலும் இல்லை, எந்த வகையான உறுதியும் இல்லை, மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த நேரத்தில், கிட்டத்தட்ட 175 அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கிட்டதட்ட 14 விசாரணை பொருட்கள் அரச இரசாயன பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், தொலைபேசி பகுப்பாய்வு, வங்கி அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பெறப்படுகின்றன. இது தொடர்பில் ஏனைய தரவுகளை வைத்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேரடி ஆதாரங்களைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் இது தற்கொலையா அல்லது கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் அடையாளம் காணப்படவில்லை” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...