follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்நஷ்டமடையும் அதானி : சீமெந்து உற்பத்தி ஆலைக்கு பூட்டு

நஷ்டமடையும் அதானி : சீமெந்து உற்பத்தி ஆலைக்கு பூட்டு

Published on

நாட்டின் முன்னணி நிறுவனமான அதானி, இந்தியாவின் ஹிமாச்சால் பிராந்தியத்தில் நிறுவப்பட்டுள்ள சீமெந்து உற்பத்தி ஆலையை திடீரென மூட தீர்மானித்துள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் உள்ள ஏராளமானோர் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் சீமெந்து தொழிற்சாலைகளை வாங்கியது.

ஆனால் சிறிது காலத்தின் பின்னர் சீமெந்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும், அதானி நிறுவனத்துக்கும் கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அதிக போக்குவரத்து செலவுகளால் தொழிற்சாலைகள் நஷ்டம் அடைவதாக நிறுவனம் தெரிவிக்கின்றது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு பணிபுரியும் சுமார் 2,000-3,000 ஊழியர்களும், தினக்கூலிக்காரர்கள் என 10,000-15,000 பேரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சீமெந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அப்பகுதி கிராமங்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

எனவே, சீமெந்து போக்குவரத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். வெளிமாநிலங்களில் இருந்து சீமெந்து கொண்டு செல்ல லாரிகளை அனுமதிப்பதில்லை.

தற்போது ஒரு டன் சீமெந்துக்கு கிலோமீட்டருக்கு 11 இந்திய ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதை ரூ.6 ஆக குறைக்க வேண்டும் என்கிறது அதானி.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...