follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுசந்தையில் போலி நாணயத்தாள் : இருவர் கைது

சந்தையில் போலி நாணயத்தாள் : இருவர் கைது

Published on

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதிப் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (08) மதியம் ஸ்டேஸ் வீதி பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை எடுக்க முயன்றனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று போலி ஆயிரம் ரூபா நாணயத்தாளுடன் இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (09) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...