follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடு"வெளிநாட்டவர்கள் குறித்து இலங்கை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"

“வெளிநாட்டவர்கள் குறித்து இலங்கை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

Published on

சீனாவிலும் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு பயணிக்கும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தி ஊடகப் பேச்சாளர் கலாநிதி சாமில் விஜேசிங்க, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு COVID-19 தொழில்நுட்பக் குழு ஒன்று கூட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

கொவிட் 19 மீண்டும் பரவத் தொடங்கினால், தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நாடு, அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று டாக்டர் விஜேசிங்க கூறினார்.

இதற்கிடையில், தொற்று நோய்கள் மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, கொவிட் 19 அறிகுறிகள் மாறியிருப்பதில் உண்மையில்லை என்று கூறினார், மேலும் நாட்டில் புதிய மாறுபாடுகள் தோன்றவில்லை என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், சாத்தியமான தொற்றுநோய்களைத் தடுக்க நல்ல சுகாதார நடைமுறைகளைத் தொடர வேண்டும் என்று வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...