follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனவரி இறுதி வாரத்தில் அமைச்சரவை மாற்றம்..

ஜனவரி இறுதி வாரத்தில் அமைச்சரவை மாற்றம்..

Published on

பல மாதங்களாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனவரி இறுதி வாரத்தில் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் அங்கு நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 6 புதிய மாகாண ஆளுநர்களும் ஒரே நேரத்தில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தமையால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகியதாகவும், தற்போது அந்த விடயம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாகவும், ஆனால் இதுவரை இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...