follow the truth

follow the truth

April, 20, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனவரி இறுதி வாரத்தில் அமைச்சரவை மாற்றம்..

ஜனவரி இறுதி வாரத்தில் அமைச்சரவை மாற்றம்..

Published on

பல மாதங்களாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனவரி இறுதி வாரத்தில் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் அங்கு நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 6 புதிய மாகாண ஆளுநர்களும் ஒரே நேரத்தில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தமையால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகியதாகவும், தற்போது அந்த விடயம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாகவும், ஆனால் இதுவரை இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...