follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2"தங்களின் பணி 8 மணி நேரம் மட்டும் அல்ல"

“தங்களின் பணி 8 மணி நேரம் மட்டும் அல்ல”

Published on

அரச உத்தியோகத்தர்களின் பணியானது வாரத்தில் எட்டு மணித்தியாலங்கள் அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படாது, அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டில் சாதாரண நிலைமையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய வருடத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வெற்றிகரமாக செயற்பட வேண்டும். இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.கடந்த ஆண்டை விட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை ஒரு பொறிமுறையாகவே பார்க்கின்றோம்.அவை அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்படவில்லை. ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்கள். பகுதிகளுக்கு இடையே போட்டியோ, இழுபறியோ இருக்க முடியாது.அவர்கள் தங்கள் பொறுப்பை மட்டுப்படுத்த முடியாது.நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை அமுல்படுத்த அனைவரும் கட்டுப்பட்டவர்கள்.

இதன் மையம் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை அலுவலகம் ஆகும். இப்படித்தான் முன்னோக்கி செல்கிறது. எனவே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தங்களின் பணி எட்டு மணி நேரம் மட்டும் அல்ல. தங்களின் பணி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அல்ல. கடினமாக உழைத்து இயல்பு நிலையை உருவாக்குவோம். அனைவரின் ஆதரவுடன் நாட்டை முன்னேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...