follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுதேர்தல் நியாயமன்றம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் - பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரை

தேர்தல் நியாயமன்றம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் – பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரை

Published on

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் நேற்று (29) தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் மாவட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான அளவுகோல்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் என்ற ரீதியில் அரசியல் கட்சிகளை வகைப்படுத்தி, அவற்றைப் பதிவுசெய்வதற்கான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் நிமல் புஞ்சிஹேவா, விசேட குழு முன்னிலையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று கூடியது.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...