follow the truth

follow the truth

March, 31, 2025
Homeஉலகம்'புத்தாண்டில் நாட்டில் பிரச்சினைகள் தீராது'

‘புத்தாண்டில் நாட்டில் பிரச்சினைகள் தீராது’

Published on

கடந்த 2022-ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு. கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நெருக்கடி அனைவரையும் பாதித்துள்ள நிலையில் இதிலிருந்து மக்களை மீட்க பிரிட்டன் அரசு நியாயமான மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது. இந்த கடினமான முடிவின் காரணமாகதான் எரிபொருளின் விலை அதிகரித்தது.

ஆனாலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். அடுத்த 12 மாதங்களிலும் இங்கிலாந்தின் பிரச்சினை தீர்வுக்கு வராது. 2023-ம் ஆண்டும் இங்கிலாந்து மக்களுக்கு நெருக்கடியான ஆண்டாகதான் இருக்கும். இந்த நெருக்கடியான 12 மாதங்களைக் கடந்த பின் இங்கிலாந்து மிகச் சிறந்ததாக இருக்கும்.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம். அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டுவிழா இங்கிலாந்தை மீண்டும் ஒன்றிணைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய காசா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காஸா பகுதியில் புதிய போர் நிறுத்த பிரேரணைக்கு ஹமாஸ் அமைப்புகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா...

மியன்மார் நில அதிர்வில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மியன்மாரில் நேற்று மாலை 5.1 மெக்னிடியூட் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நேற்று...

மியன்மார் நிலநடுக்கம் – 700-ஐ தாண்டிய உயிரிழப்பு

மியன்மாரை தாக்கியுள்ள நிலநடுக்கம் காரணமாக இதுவரை 704பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட்டுள்ள...