அடுத்தவாரம் பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஒக்டோர் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (04) முழுமையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.