follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுவரி நீக்கப்பட்டாலும் உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறையவில்லை

வரி நீக்கப்பட்டாலும் உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறையவில்லை

Published on

உள்நாட்டு சானிட்டரி நாப்கின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் அண்மைக்காலமாக நடவடிக்கை எடுத்த போதிலும், இதுவரை சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன

மூலப்பொருள் விலை உயர்வுக்கு முன்னும், வரிக்கு முன்னும் ஆறு சானிட்டரி நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் நூற்றைம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது . ஆனால் தற்போது ஒரு பாக்கெட் ஐநூறு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

வரி நீக்கப்பட்ட பின்னரும் உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாதது தொடர்பில் வினவிய போது, ​​வரிகள் நீக்கப்பட்ட பின்னரும் உற்பத்தியாளர்கள் பொருட்களின் விலையை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இல்லை என மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பாக விரைவான விசாரணை நடத்தி, விலை குறைக்கப்படாதது குறித்து உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள்...