follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுவியட்நாம் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 152 பேர் நாட்டை வந்தடைந்தனர்

வியட்நாம் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 152 பேர் நாட்டை வந்தடைந்தனர்

Published on

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் தத்தளித்த நிலையில், காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த 303 அகதிகளில் 152 பேர் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

.கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மியான்மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்குச்செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த “ லேடி ஆர் 3 ” என்ற படகு மியான்மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் மூழ்கும் நிலையில் தத்தளித்தது.

இந்நிலையில், அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரகம் வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியேற்றப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாற்றி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில் சர்வதேச புலம்பெயர் அமைப்பான IOM இன் அனுசரணையுடன் மீண்டும் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 152 பேரை நேற்று (27) வியட்நாம் நேரப்படி மாலை 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் அனைவரும்இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...