follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுஉலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு வேண்டுகோள்

உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு வேண்டுகோள்

Published on

இங்கிலாந்தின் முன்னணி நாளிதழ் ‘டெய்லி மெயில்’ குறைந்த செலவில் சிறந்த விடுமுறைப் பெக்கேஜ்களை வழங்குவதால், உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறது.

டெய்லி மெயிலின் மேரி வேல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி, இலங்கை இப்போது வழங்கும் ஆடம்பர பயணப் பெக்கேஜ்களைப் பெறுவதற்கு சுற்றுலாப் பயணிகள் மிகக் குறைவாகச் செலவழிக்கும் வாய்ப்பைப் பெறுவது அரிது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிர்ப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறை அச்சம் காரணமாக பிரித்தானியா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், தற்போது அந்த எச்சரிக்கை அறிவிப்புகளை பிரிட்டன் அரசு திரும்பப் பெற்றுள்ளது. அவர்கள் தங்கள் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு ஊக்குவிக்கின்றனர்.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு விஜயம் செய்வது நிச்சயமாக இலகுவானது என டெய்லி மெயில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு 36 மணித்தியாலங்களுக்குள் விசாக்களை டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய அந்த நாளிதழ், அதன் புகழ்பெற்ற கடற்கரைகள் மற்றும் சிறந்த விருந்தோம்பல்களுடன் இலங்கைக்கு விஜயம் செய்வதைத் தவறவிட வேண்டாம் என பிரித்தானிய வாசிகளுக்கு மேலும் அழைப்பு விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...