follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுஇந்த ஆண்டு 6,504 பேருக்கு எலிக்காய்ச்சல்

இந்த ஆண்டு 6,504 பேருக்கு எலிக்காய்ச்சல்

Published on

இவ்வருடம் 6,504 பேர் எலிக் காய்ச்சல் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதோடு, இந்த வருடம் நவம்பர் மாதத்தில் மாத்திரம் தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டு பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கை ஆயிரத்து தொண்ணூற்று நான்கு ஆகும்.

இந்த வைரஸ் ஒரு பாக்டீரியத்தால் பரவுகிறது மற்றும் எலிகள், கால்நடைகள் மற்றும் நாய்களின் மலம் மற்றும் சிறுநீரை தண்ணீரில் கலப்பதன் மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்படலாம்.

விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் சேற்றில் இறங்குவதற்கு முன்னர் இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க அரசாங்கம் வழங்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வது முக்கியம் எனவும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் பொது சுகாதார அதிகாரியிடம் பெறலாம்.

எனவே பயிர்ச்செய்கையில் ஈடுபடும் மக்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...