follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடு"குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்.."

“குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்..”

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட 670 வகையான பொருட்களில், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் இருப்பதாகவும், அதன்படி, மற்ற பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய, ஓடு இல்லாத தேங்காய்ப்பால், வெசாக் கூடைகள், காத்தாடிகள், மூங்கில் தொடர்பான பொருட்கள் உள்ளிட்டவை இன்னும் கிடைக்கின்றன. இவைகள் வரம்புகள் இன்றி இறக்குமதி செய்யப்படுவதா அல்லது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து ஒரு தேசமாக எழுந்து நிற்பதா என்பதை தீர்மானிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...