follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள்

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள்

Published on

யாழ்.நகர பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் நகரப் பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அதன் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த போதைப்பொருளை பாக்குடன் கலந்து சந்தேகநபர் அந்த போதைப்பொருளை சிறிய பிளாஸ்டிக் பையில் வைத்து யாழ்.நகரில் உள்ள பல பாடசாலை மாணவர்களுக்கு வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ் நகரை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...