follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

Published on

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஆய்வு வெற்றியடைய வேண்டுமாயின் பாடசாலைக்கு போதைப்பொருள் வரும் பிரதான பாதைகளை அடைக்க வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்துகாப்பதற்கு , போதைப்பொருள் கொண்டு வரும் முக்கிய விநியோகஸ்தர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படுவது போல் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவர்களையும் தண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவது போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த அமைச்சர், போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடலிலும் வானிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” – வீட்டு மானியத் தொகை அதிகரிப்பு

'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...